இந்த புத்தகத்தின் ஆசிரியர் பி.என். பரசுராமன் திருச்சியை சொந்த ஊராகக் கொண்டவர். சிறந்த சமஸ்கிருத அறிஞரான இவர், அந்த மொழியில் மகாபாரதம், பாகவதம், உபநிஷதங்கள், கந்தபுராணம், வேதங்களை ஆய்வு செய்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ராமாயணம் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் 120 நூல்களைப் படித்து கட்டுரைகள் தந்துள்ளார். காஞ்சி சங்கரமடம் இவருக்கு ‘சொல்லின் செல்வன்’ என்ற பட்டமும், வாரியார் சுவாமி ‘இயல் பரசுராமவேள்’ என்ற பட்டமும் தந்துள்ளனார். ஆன்மிக சொற்பொழிவும் நிகழ்த்தி வருகிறார். இவரது நூலகத்தில் ஒரு லட்சம் ஆன்மிக புத்தகங்கள் உள்ளன. தினமலர் வாரமலர் இதழின் ‘ஞானானந்தம்’ பகுதியில் எழுதிய இவரது கதைகளின் தொகுப்பே இந்த நூல்.
Be the first to review “நிம்மதியாக வாழ”